Description
ஆசிரியர் குறிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்த சுகுணா திவாகர், சிவக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்டவர். “தீட்டுபட்ட நிலா” என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் கவிஞராக அறிமுகமானார். தொடர்ந்து எழுதி வந்த அவர், ஆனந்த விகடன் இதழில் பணியாற்றினார். “பெரியார்: அறம் அரசியல் அவதூறுகள்” உள்ளிட்ட பல கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். தனது மனைவி ஜெயந்தி மற்றும் மகன் நவீன் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
நூல் குறிப்பு
கவித்துவத்தையும் தர்க்கத்தையும் முரண் அலகுகளாய் கொள்ளாமல் கூட்டு மனநிலைகளாய்க் கொண்டுள்ள சுகுணா திவாகர் பாலுறவு, கற்பு, குடிப்பழக்கம் இஸ்லாம் குறித்து பெரியாரின் சிந்தனைகள் மீது புதிய உரையாடலை நிகழ்த்துவதோடு பார்ப்பன ‘காலச்சுவடு’ இதழ் முன்னெடுத்த பெரியார் எதிர்ப்பையும் இந்துத்துவக் கதாசிரியன் ஜெயமோகனின் பெரியார் வைக்கம் போராட்டம் குறித்த அவதூறுகளையும் திரிபுகளையும் வரலாற்றுத் தரவுகளோடும், சமகாலச் சான்றுகளோடும் மிக நேர்த்தியாக எதிர் கொண்டு முறியடித்துள்ளது இத்தொகுப்பின் தனித்துவம் என்று கருதுகிறோம்.
Reviews
There are no reviews yet.