Description
நூல் குறிப்பு:
பிறப்பால் உயர்ந்தவர்கள் என்கிற நம்பிக்கை உடையவர்களைச் சேரிகளில் பணி செய்ய நியமனம் செய்வது பயனற்ற ஒன்றாகும். சேரிகளில் உண்மையாகவே சிறப்பான அளவுக்குப் பணிகள் நடைபெற வேண்டுமென நீங்கள் விரும்பினால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை நியமனம் செய்யுங்கள்.
ஆசிரியர் குறிப்பு;
கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். வெள்ளைக் குதிரை இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
சரண்குமார் லிம்பாலே அவர்களின் தலித் பார்ப்பனன் என்ற மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பையும் ஓலம் என்கிற நாவலையும் தமிழாக்கம் செய்துள்ளார்.
இருட்டடிக்கப்பட்ட அருந்ததிய மக்களின் வேர் கொண்ட இருப்பைப் பேசும் சக்கிலியர் வரலாறு எனும் ஆய்வு நூலை கல்வெட்டு, ஓலைச்சுவடி, இலக்கியப் பனுவல்களின் துணையோடு தமது 13 ஆண்டு கால ஆய்வுழைப்பில் உருவாக்கியுள்ளார்.
Reviews
There are no reviews yet.