Description

புத்தகக் குறிப்பு :

நாமறிந்த மற்ற தலித் எழுத்தாளர்களில் இருந்து சரண்குமார் லிம்பாலேயைத் தனித்து காண்பிப்பது அவருடைய சுயவிமர்சனமும் சுய எள்ளலும் ஆகும். தனக்கு வெளியே தொழிற்படும் ஜாதியத்தையும், மதவாதத்தையும் தோலுரிப்பதோடு நின்று விடுவதில்லை அவரது கதைகள்.

தலித்துகளாகிய தங்களுக்குள் ஆதிக்கத்துக்கு ஆதரவாக, இணக்கமாக போவதற்கான கூறுகள் என்னென்ன விதங்களில் வடிவங்களில் வந்து குடியேறி இருக்கின்றன என்பதையும் தயவு தாட்சண்யமின்றி விசாரணை செய்பவை.

– மொழிபெயர்ப்பாளரின் முன்னுரையிலிருந்து

 

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். வெள்ளைக் குதிரை இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

சரண்குமார் லிம்பாலே அவர்களின் தலித் பார்ப்பனன் என்ற மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பையும் ஓலம் என்கிற நாவலையும் தமிழக்கம் தமிழாக்கம் செய்துள்ளார்.

இருட்டடிக்கப்பட்ட அருந்ததிய மக்களின் வேர் கொண்ட இருப்பைப் பேசும் சக்கிலியர் வரலாறு எனும் ஆய்வு நூலை கல்வெட்டு, ஓலைச்சுவடி, இலக்கியப் பனுவல்களின் துணையோடு தமது 13 ஆண்டு கால ஆய்வுழைப்பில் உருவாக்கியுள்ளார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தலித் பார்ப்பனன்”

Your email address will not be published. Required fields are marked *