Description
நூல் குறிப்பு:
தர்க்கம், விவாதம் ஆகியவற்றின் மூலம் உண்மையையும் நீதியையும் உணர்ந்தும் உணரச் செய்தும் அவற்றின் வழி ஒழுகுவதும் பவுத்த வாழ்வியல் நெறி. மாறாக வன்முறையின் மூலமாகவும் சதிச் செயல்களின் மூலமாகவும் நியாயமற்ற ஒன்றை நடைமுறைப்படுத்தி அதற்கு காவலாக கடவுளை நிறுத்தி வைப்பது சாதி இந்துக்களது நெறி. உண்மையையும் நியாயத்தையும் தவிர்த்துவிட்டுப் பாராமுகமாய் இருக்கும் வரையில் தான் தமது அதிகாரம் செல்லுபடியாகும் என்பது சாதி இந்துக்களுக்குத் தெரியும். அப்படிப் பாராமுகமாய் இருப்பதாலேயே இருக்கும் உண்மைகள் இல்லாமல் போய்விட மாட்டா. அருந்ததியர் குறித்த உண்மைகளுக்கும் இது பொருந்தும்.
– நூலிலிருந்து
ஆசிரியர் குறிப்பு:
கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். ‘வெள்ளைக் குதிரை’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
சரண்குமார் லிம்பாலே அவர்களின் ‘தலித் பார்ப்பனன்’ என்ற சிறுகதைத் தொகுப்பையும் ‘ஓலம்’ என்கிற நாவலையும் தமிழாக்கம் செய்துள்ளார்.
அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தருவதற்கான தரவுகளையும் தர்க்கங்களையும் கொண்டு ஆவணங்களை உருவாக்கியவர்.
Reviews
There are no reviews yet.