Description
நூல் குறிப்பு:
இந்தியச் சமூகம் உற்பத்தி செய்கிற இலக்கியம், அரசியல், கலை இவை எல்லாவற்றிலும் வண்டி, வண்டியாய் மண்டிக்கிடக்கிறது ஜாதி. இவற்றை எதிர் கொள்கிறது அழகிய பெரியவனின் இக்கட்டுரைத் தொகுப்பு.
சுந்தரராமசாமி சிறுகதை மீதான எதிர்வினையில் சக எழுத்தாளர்களின் அலட்சியப் போக்கு, தலித் இலக்கியம் குறித்த சுஜாதா அடித்த ஜம்பங்கள், டானியல் எழுத்துகளில் படிமங்களாய் உள்ள தலித்துகளின் போராட்டங்களையும் களிப்புணர்வையும் நிதானித்து கதையாடிப் போகும் அழகிய பெரியவன், வரலாற்று வெளியில் நின்று பேசும் ஜெ.ஜெ. தாஸ் என்ற தொழிற்சங்கப் போராளி பற்றியக் கட்டுரை இத்தொகுப்பில் மிகத் தனித்துவமானது.
ஆசிரியர் குறிப்பு:
அரவிந்தன் என்ற இயற்பெயர் கொண்டவர் அழகிய பெரியவன். 1968 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த இவர் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பன்முகத் தன்மையில் எழுதி வரும் அழகிய பெரியவன் தமிழ் நாட்டின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இவர் ‘தகப்பன் கொடி’, ‘வல்லிசை’, ‘யாம் சில அரிசி வேண்டினோம்’, ‘சின்னக்குடை’ ஆகிய நாவல்களையும் ‘ஞாபக விலங்கு’, ‘நீ நிகழ்ந்த போது’ உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளையும், ‘தீட்டு’, ‘திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்’, ‘குறடு’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
Reviews
There are no reviews yet.