Description
புத்தகக் குறிப்பு
உறவு விலக்கப்பட்ட, தான் உறவிலிருந்த இயற்கையின் படிமங்களை குறியீடுகளாய் நமது விழிப்படலங்களின் காட்சியாக்கி உள்ளுணர்வை வெளிப்படுத்தும் மின்ஹாவிடம் தொன்மப் பெண்களின் பெரும் மூச்சும் பின் நவீன மனவெளியும் சாரையும் நல்ல பாம்புமாய் இழைந்து கொண்டிருக்கின்றன இக்கவிதை தொகுப்பில்.
ஆசிரியர் குறிப்பு
1991 இல் கிழக்கிலங்கை மட்டக்களப்பில் பிறந்தவரான கவிஞர் மின்ஹா வின்சன்ட் தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர். சிறிய வயதிலிருந்து வாசிப்பின் மீதும் கவிதைகளின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பல மின்னிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. உளவியல் துறையில் பயின்றுள்ளார். ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். சமூக விஞ்ஞானம், தத்துவம், வரலாறு, கலைத்துறை சார்ந்த தீவிரத் தேடலும் ஆர்வமும் கொண்டவர்.
இது இவரது மூன்றாவது தொகுப்பு. முந்தைய கவிதைத் தொகுதிகளாக ‘நாங்கூழ்’, ‘கடல் காற்று கங்குல்’ என்பன வெளிவந்துள்ளன. நவீன தமிழ்க்கவிதைப் பரப்பில் மிகக்குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பையும் வாசிப்பின் அடிப்படையிலான வாசக தன்னெழுச்சி அறிமுக மதிப்புரைக் குறிப்புகளை மிகப் பரவலான வரவேற்பை பெற்றவை மின்ஹாவின் கவிதைகள்.
Reviews
There are no reviews yet.