Description
நூல் குறிப்பு:
உணர்தலின் வெம்மை, சாதியை உருக்குலைக்க வல்ல இயங்கியல் கவிதைகளாகி விடுகிறது. மதுரை வீரன் மீதேறிக் கொண்டு, கலவரக் கடவுள்களுக்கும் அவற்றைக் கட்டிக்காக்கும் வருண சாதிமான்களுக்கும் பழஞ்செருப்பு பரிகாரம் செய்ய விரும்பும் கவிதைகள் இவை.
ஆசிரியர் குறிப்பு;
கவிஞர் ம. மதிவண்ணன் நான்கு கவிதை நூல்களையும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். வெள்ளைக் குதிரை இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
சரண்குமார் லிம்பாலே அவர்களின் தலித் பார்ப்பனன் என்ற மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பையும் ஓலம் என்கிற நாவலையும் தமிழாக்கம் செய்துள்ளார்.
இருட்டடிக்கப்பட்ட அருந்ததிய மக்களின் வேர் கொண்ட இருப்பைப் பேசும் சக்கிலியர் வரலாறு எனும் ஆய்வு நூலை கல்வெட்டு, ஓலைச்சுவடி, இலக்கியப் பனுவல்களின் துணையோடு தமது 13 ஆண்டு கால ஆய்வுழைப்பில் உருவாக்கியுள்ளார்.
Reviews
There are no reviews yet.