Description
ஆசிரியர் குறிப்பு
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் 1956 ஆம் ஆண்டு பிறந்தவர் முனைவர் மு. வளர்மதி. வழக்குரைஞர் அண்ணா. நாகரத்தினம் அவர்களை மணந்த இவருக்கு குறிஞ்சி என்ற மகள் உள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியலில் பட்டயம் பெற்ற இவர், முனைவர் பட்டமும் அந்நிறுவனத்திலேயே பெற்று, இணைப் பேராசிரியராக பணியாற்றினார். “மொழிபெயர்ப்புக் கலை”, “மானுட விடுதலை”, (இங்கர்சால் மொழிபெயர்ப்பு) ஆகிய இருநூல்களை முதல் வெளியீடுகளாகக் கொண்டு வந்தார். பின்னர் திராவிட இயக்க சிந்தனைக்குரிய தந்தை “பெரியார் சிந்தனைகள்”, “சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்” (தொகுதி 1, 2), “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்”, “அன்னை நாகம்மையாரும் தோழர் எஸ். ஆர். கண்ணம்மாளும்”, “பறை-இசைக்கருவி ஓர் ஆய்வு”, “இங்கர்சால் சிந்தனைகள்” ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பின், தற்போது பணி நிறைவு பெற்று சேலத்தில் வசித்து வருகிறார்.
நூல் குறிப்பு
இறையும் பறையும் என்ற இந்த நூலின் தலைப்பு சிலருக்கு முரணாகத் தோன்றும். ஏனெனில் இறை புனிதத்துவத்தை உணர்த்துவது. ‘பறை’ தற்கால நிலைப்படி அது தீண்டாமையை உணர்த்துவது என அடையாளமாக்கப்பட்டுவிட்டது. இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருப்பதாக உணரப்படுகின்றன. ஆனால் இரண்டுக்கும் (இறை – பறை) உள்ள இணைபிரியா தொடர்புகளை ஆன்மிகப் பெரியோர்களான ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் வழங்கப்பட்ட இலக்கியப் படைப்புகளைக் கொண்டு விளக்க எடுத்துக் கொண்ட ஒரு சிறு முயற்சியே இந்நூல்.
- முனைவர் மு. வளர்மதி
Reviews
There are no reviews yet.