Description
நூல் குறிப்பு:
தமிழிலக்கியத்தில் புதுக்கவிதையிலும் மரபிலும் ஆளுமைகளாக அறியப்பட்ட பன்னிரண்டு கவிஞர்களால் கவிதைக்கான கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட மிக முக்கிய உரைகளிவை.
கவிதையின் வரலாற்றிலும் அதை உருவாக்குகின்றவர்களின் பின்புல அரசியல், சமூக பண்பாட்டை அறியும் விதமாக இவ்வரைகள் இருப்பது இன்றும் இலக்கிய சுவராசியம் மிக்கதாகவே உள்ளது.
ஆசிரியர் குறிப்பு:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தில் 1956 ஆம் ஆண்டு பிறந்தவர் முனைவர் மு. வளர்மதி. வழக்குரைஞர் அண்ணா. நாகரத்தினம் அவர்களை மணந்த இவருக்கு குறிஞ்சி என்ற மகள் உள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியலில் பட்டயம் பெற்ற இவர், முனைவர் பட்டமும் அந்நிறுவனத்திலேயே பெற்று, இணைப் பேராசிரியராக பணியாற்றினார். “மொழிபெயர்ப்புக் கலை”, “மானுட விடுதலை”, (இங்கர்சால் மொழிபெயர்ப்பு) ஆகிய இருநூல்களை முதல் வெளியீடுகளாகக் கொண்டு வந்தார். பின்னர் திராவிட இயக்க சிந்தனைக்குரிய தந்தை “பெரியார் சிந்தனைகள்”, “சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்” (தொகுதி 1, 2), “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்”, “அன்னை நாகம்மையாரும் தோழர் எஸ். ஆர். கண்ணம்மாளும்”, “பறை-இசைக்கருவி ஓர் ஆய்வு”, “இங்கர்சால் சிந்தனைகள்” ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பின், தற்போது பணி நிறைவு பெற்று சேலத்தில் வசித்து வருகிறார்.






Reviews
There are no reviews yet.